வீடு வீடாக சென்று உதயநிதி ஸ்டாலின் செய்த காரியம்... ஸ்டாலின் பாணியில் தூள்கிளப்பும் செயல்
தந்தையைப் போன்றே தமிழக மக்களின் தேவைகளை உதயநிதி ஸ்டாலின் செய்துவருவதுடன், தொகுதியே கதி என்ற நிலையில் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிசைக்கு உதவுவதற்காக கொரோனா வார் ரூம் சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டு நேரில் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி தனது தொகுதி மக்களை நேரிலே சந்தித்து வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி குறித்தும், ஊசி போட்டீர்களா என்று கேட்டதுடன் விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள வீடுகளுக்கு சென்று 'தடுப்பூசி மூலம் கொரோனா உயிர்கொல்லியை விரட்டுவோம்' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். நான் கூறியதை ஏற்ற அப்பகுதி மக்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதாக உறுதியளித்தனர். pic.twitter.com/dwfxBqfYBp
— Udhay (@Udhaystalin) May 16, 2021