நள்ளிரவில் காணொளி அழைப்பு: புகைப்பட ஆதரத்துடன் திருநங்கை! நாஞ்சில் ஏமாற்றினாரா?
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.
ஆனால் இப்போது நான் திருநங்கை என்பதால் என்னைத் தவிர்க்கிறார் என திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்த விடயம் இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.
நாஞ்சில் விஜயன்
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.
நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தான் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை வைஷுலிசா தன்னை ஏமாற்றி விட்டார் என பாலியல் புகார் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு அல்ல.
இதனால் என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள்.” என மனைவியுடன் சேர்ந்து காணொளியொன்றை வெளியிட்டார்.
குறித்த காணொளியில் உங்களை ஏமாற்றியதற்காக ஆதாரங்கள் இருந்தால், வெளியிடுமாறு கூறியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது புகைப்பட ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ள திருநங்கை வைஷுலிசா இது குறித்து பேசிய விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |