மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் செய்யும் வேலை... அடுத்த நொடியே மணமகளின் ரியாக்ஸன்! வைரலாகும் வீடியோ
கொரோனா பாதிப்பின் காரணமாக, அனைவரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், தொழில்கள் அனைத்தும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், ஐ.டி போன்ற கணினியில் பணி இருக்கும் துறைகள் கொஞ்சம் தப்பித்தன.
அவர்கள், வீட்டிலிருந்து பணி(Work from home) எனும் முறையை அறிமுகப்படுத்தின.
கொரோனா முன்பே, வீட்டிலிருந்து பணி என்பது ஐ.டி துறைகளுக்கு பழக்கம்தான் என்றாலும், கொரோனாவுக்குப் பிறகு முழு நேர வீட்டிலிருந்து பணி என்றானது.
அதனால், எல்லா இடத்திலும், லேப்டாப்பை கொண்டு வந்து வேலை செய்வதைப் பார்க்க முடிந்தது. அதில், தற்போது உச்சகட்டமாக, திருமணம் செய்யும் மாப்பிள்ளை ஒருவர் மணமேடையில் உட்கார்ந்துகொண்டு கணினியை வைத்துக்கொண்டு வேலைபார்க்கிறார்.
இந்த திருமண வீடியோ மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவிடும் பலரும், ‘உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா என்பதுபோல நகைச்சுவையாக பதிவிட்டுவருகின்றனர்.