ஆசை ஆசையாக தாலி கட்ட காத்திருந்த மாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சி கொடுத்த மணமகள்!
கொரோனா இருப்பதாக கூறி பெண்ணொருவர் திருமணத்தினை நிறுத்திய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும் ஆனந்தபுரம் முதுகுப்பா பகுதியைச் சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
நிச்சயித்தபடி கோவிலில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று நலங்கு நிகழ்ச்சி எல்லாம் நல்லபடியாக முடிந்துள்ளது.
மாப்பிள்ளை வீட்டினர் 1.5 லட்சம் ரூபாயும், 13 சவரன் நகையும் பெண் வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மணப்பெண் திடீரென தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி திருமணத்தினை நிறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்நிலையம் சென்ற மணப்பெண் தனக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும் கட்டாயப்படுத்தி நடத்துவதாகவும் கூறிய நிலையில், பொலிசார் வாங்கிய நகை மற்றும் பணத்தினை உரியவர்களிடம் கொடுக்கும் படி கூறி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
மணமேடை வரை வந்துவிட்டு இறுதியில் தனக்கு கொரோனா என்று பொய் கூறி பரபரப்பினை ஏற்படுத்திய பெண்ணால் மணமகன் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.