தனியாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ்... மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்கின்றதா அதிமுக?
தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் நேற்றைய தினத்தில் பொறுப்பேற்றுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவராக வரவிருப்பது யார் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த மறுநாளிலிருந்து வெறும் 71 நாட்கள் மட்டும் முதல்வராக ஓபிஎஸ் இருந்தார்.
பின்பு ஓபிஎஸ் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு இருவரும், தனது கடமையினை செய்து வந்தனர்.
மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/HAOno05qfN
— O Panneerselvam (@OfficeOfOPS) May 8, 2021
இந்நிலையில் திமுக 10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது அரியணையில் ஏறியிருக்கின்றது. இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் எதிர்கட்சி தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
பதவியேற்பு நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். இதுநாள் வரையிலும் எடப்பாடி, பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் கேள்வியினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
#EXCLUSIVE | OPS - EPS தொண்டர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு pic.twitter.com/A9ZGXpivuS
— Don Updates ⚡️ (@Don_Updatez) May 7, 2021
நேற்றைய தினத்தில் இருவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் யார் தலைவர் என்ற முடிவு எடுக்கப்படவில்லை.
அதேபோல வன்னியர் இடஒதுக்கீடு போன்ற எடப்பாடியின் முடிவுகள் தான் தோல்விக்குக் காரணம் என ஓபிஎஸ் குறை கூற, நான் உழைக்கவில்லை என்றால் இந்த வெற்றி கூட இருக்காது என எடப்பாடி சீறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான சூழலில் ஓபிஎஸ் தனித்து அறிக்கை வெளியிட்டிருப்பது அனைவரது கவனத்தையும் அதிமுக பக்கம் திருப்பியிருக்கிறது.