விமான தாக்குதலில் இருந்து மக்களை காத்த இங்கிலாந்தின் குகைகள் நகரம் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இரண்டாம் உலகப்போர் விமான தாக்குதலில் மக்களை பாதுகாத்த
இங்கிலாந்தின் குகைகள் நகரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
இங்கிலாந்தின் குகைகளின் நகரம் என்று அழைக்கப்படும் இப்பகுதி நாட்டிங்காமில் ப்ராட்மார்ஸ் ஷாப்பிங் மையத்தோடு தொடர்பானதாக அமைந்துள்ளது.
இதன் துவக்கம் என்று பார்த்தால், 893 ம் ஆண்டில் வாழ்ந்த அரசர் ஆல்ப்ரெட் காலத்தில் வாழ்ந்த துறவியான ஷெர்போர்னே அஸர் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
1270 லிருந்து 1300 வரையிலான மட்பாண்ட ஆதாரங்கள் இதில் கிடைத்துள்ளது. 17-ம் நூற்றண்டிலிருந்து 1845 வரை ஏழை மக்களின் வசிப்பிடமாக இருந்துள்ளது. பிறகு, அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
இது 2004 ல் சுற்றுலா தலமாக சில மாற்றங்களுடன் பார்வையாளர்களுக்கான அனுமதி துவக்கப்பட்டது.
தோண்டியதாக மட்டுமில்லாமல் தேவைகளுக்கு எற்ப கற்களை வைத்து கட்டியும் இருக்கின்றனர். அப்போதைய கணக்குப்படி நகர் முழுவதும் 500-க்கும் மேலான குகைகள் இருந்தன.
அதில் 4 வருடங்களுக்குள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட குகைகள் மட்டும் 100 இருக்கும். இந்த குகைகள் முற்றிலும் இயற்கையாக அமைந்திருந்தது, அதை மக்கள் பாதுகாப்புக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லமுடியாது.
மலைகளிலும் இறுக்கமான மணல் குன்றுகளிலும் ஏதுவான இடங்களில் பழங்கால மக்களால் குடைந்து உருவாக்கப்பட்டதுதான் இவைகள்.
நாட்டிங்காம் பகுதியில் இருக்க வீடு இல்லாத ஏழைகள். உளி, சுத்தி, மணல்வாறும் சவல் போன்ற கருவிகளை எடுத்துக்கொண்டு, இந்த மலைப்பகுதிக்கு சென்று, குகைகளை உருவாக்கி குடியமர்ந்து கொள்வது வழக்கமாக இருந்துள்ளது என்று 1870 ல் ஆனோன் என்பவர் எழுதிவைத்துள்ளார்.
பார்வையாளர்களை கவரும் முக்கியமான பகுதியாக நாட்டிங்காமில் இந்த குகைகளின் நகரம் உள்ளது. இங்கு நிறைய குகைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குகைகள் இடைகாலத்தில் கேட்பாரற்று இருந்துள்ளது. அது வீடுகளில்லாத ஏழைகள் மற்றும் சேரி மக்கள் தங்கி வாழ்ந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
விமானதாக்குதலின் போது பதுங்கி பாதுகாத்துக்கொள்ளும் இடமாகவும் இருந்துள்ளது. 1941-ல் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது இங்கு 86 விமான தாக்குதல் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள் அதற்குள் தங்கி தங்களை பொழியும் குண்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக 1941 மே 8-ல் பேருதவியாக இருந்துள்ளது.
மேலும் இந்த குகைகளில் தோண்டி எடுக்கப்பட்ட மணல், மூட்டைகளாக நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலவறைகளில் வசித்தவர்களால் ஆடு, மாடுகள் இங்கு வளர்க்கப்பட்டுள்ளது. அதனால், ஆடுகள், மாடுகள் அடைப்பதுக்கும் இந்த குகை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அதற்கான வட்டமான பாத்திகள், தளங்கள் இங்கு இன்னும் காணப்படுகிறது. இந்த குகை உள்ளே பயணிகள் சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பெரிய பள்ளங்களுக்கு மேல் ஒத்தையடி பாதைகளும் அதன் இருபுறமும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட தடுப்புகளும், மின்விளக்கு வசதிகளும் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் தோல்கள் பதனிடப்படுவதுக்கும் இந்த குகைகள் பயன்பட்டு வந்திருக்கிறது, நகருக்கு குடிநீர் வழங்கும் லீன் ஆற்றை, விலங்குகளின் தோல்களை கழுவி சுத்தம்செய்ய இதி வாழ்ந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த குகை நகரத்தை பிரம்மாண்டம், அதிசயம் என்று சொல்வதைவிட, அங்கு வாழ்ந்த பழங்கால மனிதர்களை நினைவுபடுத்துவதுதான் சிறப்பு.
எல்லா நாடுகளிலுமே பயணிகளை ஈர்க்கக்கூடிய தகுதி உள்ள பகுதி என்று தெரிந்துவிட்டால். அதை, இன்னும் சீர்படுத்தி சுற்றுலாதலமாக்கி புகழையும் பொருளாதாரத்தையும் சேர்ப்பது நடந்து வருகிறது.
அந்த வகையில், இந்த இங்கிலாந்தின் குகைகள் நகரமும் ஒரு தகுதியுடையதே. நாட்டிங்காம் செல்பவர்கள் இதை ரசிப்பது நல்ல அனுபவமே!!!