மாஸ்க் போடவில்லை என போலீசாரை திட்டிய பெண்ணுக்கு இப்படி ஒரு சோகமா? திகைக்க வைத்த குடும்பத்தினர்!
கடந்த நாட்களுக்கு முன்பு மாஸ்க் போடவில்லை என போலீசாரிடம் சிக்கிய பெண், அபராதம் கட்ட முடியாது எனவு, தகாத வார்த்தைகளால் மாவட்ட ஆட்சியரையும், காவல்துறையினரையும் திட்டிய வீடியோ காட்சி வைரலாகி வந்தது.
இதனால், அந்த பெண் மீது தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, தஞ்சை மனோஜிபட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் பன்னீர்செல்வம் என்பவரது மகள் சியாக்கி என்கிற நந்தினி என்பது தெரியவந்தது.
இவர், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு இவர், சென்னையில் சில காலம் வேலை பார்த்துள்ளார். தற்போது,தஞ்சையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண் பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற நோயால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ ஆவணங்களை அவரின் குடும்பத்தினர் காவல் ஆய்வாளரிடம் சமர்ப்பித்தனர்.
மேலும், மூன்று வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைபோலார் டிசார்டர் இருப்பதால் அவருக்கு கொரோனா பற்றி எதுவும் தெரியாது. மாஸ்க் ஏன் போட வேண்டும் சானிடைசர் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெரியாது.
தவறாக தஞ்சை மாவட்ட ஆட்சியரையும், காவல் துறையினரையும் பேசியதற்காக நானும் என் குடும்பத்தினரும் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சகோதரர் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் போலீசார் திகைத்துபோயுள்ளனர்.