திமிங்கலம் துப்பிய வாந்தியால் கோடீஸ்வரரான மீனவர்... நடந்தது என்ன?
இந்த உலகமே பல ஆச்சர்யங்கள் நிரம்பிய இயற்கையால் சூழப்பட்டுள்ளது. நாள்தோறும் இதில் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கொரொனா தொற்றால் பெரும் கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கைப் பேரழிவால் ஒரேநாளில் தனது சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்களும், ஒரேநாளில் கிடைத்த வைரம்,முத்துகளால் கோடீஸ்வர்கள் ஆனதையும் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் திமிங்கலங்கள் நீண்ட நாள் கழித்து வாயிலிருந்து துப்பும் பெர்கிரிஸ் என்ற திடவாந்தியால் சில கோடீஸ்வரர்களாக மாறியதை செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்தவகையில் தற்போது, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மீனவர் மாஹாபன் என்பவர் திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் எனப்படும் 7 கிலோ திடவாந்தியால் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் திரவம் வாசனை திரவியம் செய்யப் பயன்படுகிறது.