தமிழா தமிழா: தலை வழுக்கை என்பதால் 30 பெண்கள் நிராகரித்தார்களா! வைரலாகும் காணொளி
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்ற ஒரு நபர் தன் வழுக்கை தலையால் அனுவித்த துன்பங்கள் குறித்து வெளிப்படையாக அரங்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுமார் 30 வரன் பார்த்தும் தலை வழுக்கை என்ற ஒற்றை காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டுள்ள இவரின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் அடங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வாரம் தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்ற நபரொருவர் தன் வாழ்க்கையில் வழுக்கை தலையால் அனுபவித்த கொடுமைகள் குறித்து பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன், இணையத்தளவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |