கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம், வாழ்க்கைத்துணையை கிராமத்தில் இருந்து தேர்ந்து எடுத்த நகரத்துவாசிகள் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதில் பங்கேற்ற நகரத்து வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட பெண்ணொருவர் தனது கணவரின் கிராமத்து வாழ்க்கை மற்றும் அவரின் பேச்சு வழக்கு முதற்கொண்டு முழுமையாக மாற்றியது குறித்து அரங்கத்தில் பேசிய விடயங்கள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவயைில், இந்த வாரம், வாழ்க்கைத்துணையை கிராமத்தில் இருந்து தேர்ந்து எடுத்த நகரத்துவாசிகள் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

அதில் கலந்துக்கொண்ட பெண்ணொருவர் தனது கிராமத்து கணவரை, அவரின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காது ஒரு அடிமைபோல் நடத்துவது குறித்து அரங்கத்தில் வெளிப்படைய பேசிய போது, தொகுப்பாளர் ஆவுடையப்பன் தக்க பதிலடி கொடுத்த காணொளியொன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |