இன்னும் எனக்கு தைரியம் வரவில்லை... இறந்த மனைவின் பரிசு பற்றி கண்ணீர் மல்க பேசிய நபர்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம், யார் வாழ்க்கை மிக துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற நபர் ஒருவர், தன் மனைவியை இழந்த பின்னர் இன்று வரையில் அவர் முதல் முதலில் பரிசளித்த கேமராவை தொடக்கூட எனக்கு தைரியம் வரவில்லை என அரங்கத்தில் கண்ணீர் மல்க பேசி தொகுப்பாளர் உட்பட அரங்கத்தையே கண்ணீரில் ஆழ்த்திய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில், இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில், யார் வாழ்க்கை மிக துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில் பங்கேற்ற மனைவியை இழந்த ஒரு நபரின் கண்கலங்க வைக்கு பதிவு இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன், குறித்த நபருக்கு நெட்டிசன்கள் தங்களின் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |