இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா ! அரங்கத்தையே நெகிழ வைத்த தம்பதியினர்
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற கண் பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை இல்லாததால், மாதவிடாய் கலங்களில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள சிரமாக இருக்கும் என சிறுவயதிலேயே கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்களாம்.

இது தெரிந்து ஒரு பார்வைற்ற நபர் இவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இது குறித்து தழிழா தழிழா அரங்கில் குறித்த பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருவதுடன் ரசிகர்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வாரம் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பங்கேற்ற பார்வையற்ற தம்பதியினரின் மெய்சிலிர்க்க வைக்கும் காதல் கதை இணையத்தில் பராட்டுகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |