தமிழகத்தில் மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! கட்டுப்பாடு விதிகள் என்னென்ன?
covid19
tamilnadu
covidrules
By Rooban
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த நிலையில், தமிழகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது.
இதனால், அரசு ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிகளை விதித்து அமலில் இருக்கும் நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே.,6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இந்த கட்டுப்பாடுகள் மே.,6 காலை 4 மணி முதல் துவங்கி மே., 20 காலை 4 மணி வரை அமலில் இருக்குமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- அதில், ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
- ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
- இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை.
- நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.
- அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.
- மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.
- காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
- ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி
- ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி.
- பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம்.
- இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி
- சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை
- திறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லை.
-
மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.
குளிர்ந்த நீரை பருகுவது இதயத்தை பாதிக்குமா? 21 மணி நேரம் முன்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US