Bigg Boss: வெட்ட வெளிச்சமாகும் கனியின் சுயரூபம்... மீண்டும் வெடிக்கும் சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சாதுவாக இருந்த கனி தற்போது சுயரூபத்தினைக் காட்ட ஆரம்பித்துள்ளார். பாருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. இதில் 20 பேர் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களாக நான்கு பிரபலங்கள் உள்ளே சென்றனர். தற்போது வரை ஆறு பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிரவீன் எவிக்ஷன் போட்டியாளர்களிடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது வரை நாமினேஷனுக்கு வாராமல் இருந்த கனி தற்போது முதன்முறையாக வந்துள்ளார்.
மேலும் இந்த வாரத்தில் சரியாக விளையாடாதவர்களின் பெயரில் கனி வந்துள்ள நிலையில், கனி மற்றும் திவாகர் இருவரும் சிறைக்கு சென்றுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |