இதுவரை 10 சீரியல் நடிகைகள்... சிக்கிய பலே திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்! நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, நசரத்பேட்டையில், போலீஸ் எனக்கூறி காரில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரிடம் 4 சவரன் தங்க நகைகள் பறித்துக்கொண்டு திருடன் ஒருவன் தப்பி சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி மற்ற இடங்களில் காரில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்டதாக பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் வரத் தொடங்கின.
இதனால், விசாரணையை தொடங்கிய காவல்துறையினர்கள் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு காதல் ஜோடியிடம் நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட அவரை சுற்றிவளைத்து கொண்ட போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
10 வருட கொள்ளை
விசாரிக்கையில், அவரது பெயர் சிவராமன் (38) என்பதும், நெடுஞ்சாலையோரத்தில் காரில் அமர்ந்திருக்கும் ஜோடிகளிடம், தான் காவல் துறை அதிகாரி எனக் கூறி மிரட்டி நகை, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, சிவராமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர் கடந்த 8 ஆண்டுகளாக காதல் ஜோடிகளை குறிவைத்து நகை மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இவன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தாலுகா சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர். தினமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் பணம் கிடைக்குமாம்.. 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டு, ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளையடித்து உள்ளார்.
இவன் மேல், 45 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். காரில் உட்கார்ந்து தனிமையில் பேசும் காதல் ஜோடிகளை மட்டுமே குறி வைத்து வேட்டையை நடத்துவாராம்.
இந்த நகைகளை அடகு கடையில் கொண்டுபோய், சிவராமன் விற்றுவிடுவாராம். இதெல்லாம் இவர் செய்தாலும், அந்த பணத்தை வைத்து, நடிகைகளிடம் தான் அதிக பணத்தை கொடுத்து உல்லாசம் அனுபவிப்பத்துள்ளான்.
நடிகைகளுடன் உல்லாசம்
பின்னர் வாக்குமூலத்தில், சிறிய வயதில் இருந்தே இவருக்கு நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பல லட்சம் செலவு செய்து ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் எடுத்து, பாலியல் புரோக்கர்கள் மூலம் டிவி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.
மேலும், முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்திருக்கிறார்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பெரும்பாலும் நடிகைகளுக்கு தான் செலவு செய்திருக்கிறார்.
நடிகைகளுக்கு கொடுப்பது ஏன்?
இவர் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் இவரை பார்க்க மாட்டார்களாம்.
ஆனால், பணம் இருந் தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகள் தான் மூலம் தெரிந்து கொண்டதாக சொல்கிறார்.
நடிகைகளின் லிஸ்ட்
இதெல்லாம் போக, சிவராமன் தற்போது போலீசாரிடம் ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளான். அந்த லிஸ்ட்டில் எந்தெந்த நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தேன் என கூறியிருக்கிறான்.
அதில் அதிகளவில், 4 எழுத்துக்கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரம் தந்துள்ளார். அடுத்து, 5 எழுத்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்துள்ளான்.
இது சம்மந்தமான புகைப்படங்களையும் தந்திருக்கிறார் சிவராமன். சில ஆதாரங்களையும் கொடுத்து இருக்கிறான்.
அதில் உள்ள முன்னணி சின்னத்திரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளின் பெயர் பட்டியலை பார்த்து போலீசாரே வாயடைத்துபோயுள்ளனர்.
நடிகைகளிடம் விசாரணை
விசாரணையின் முதற்கட்டமாக சிவராமன் தந்த போட்டோக்கள் புகைப்படம் மற்றும் சில ஆதாரங்களின்படி 10 முன்னணி நடிகைகளிடம் மட்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளார்களாம்....