கொரோனாவை வீட்டிலிருந்தே விரட்ட வேண்டுமா? இந்த உணவுகள் மட்டும் போதும்
கொரோனா தொற்று தற்போது அதிகமாக பரவி வரும் நிலையில், இதன் உருமாற்றம் தற்போது ஒமிக்ரான் தொற்றில் வந்து நிற்கும் நிலையில், உலக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 வைரஸ் முதன்முதலாக பரவிய சீனாவில் உள்ள வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்காவில் பரவும் ஒரு புதிய வகை சார்ஸ் கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸின் பெயர் தான் 'நியோகோவ்'. இந்த வைரஸ் அதிக இறப்பை ஏற்படுத்துவதோடு, வேகமாக பரவக்கூடியது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போது பரவிரும் ஒமிக்ரான் வைரஸின் தீவிரத்தன்மை குறைவாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினாலும், நாம் எச்சரிக்கையை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இவ்வாறு நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் மிக அவசியமாக இருக்கின்றது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து தப்பிக்க நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பச்சைக் காய்கறிகள்
பச்சைக் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் , அவற்றில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் பி12 நிறைந்துள்ளது.
அதேபோல உலர்ந்தப் பழங்களில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது என்பதால் அதையும் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
புரதம் நிறைந்த உணவுகள்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே புரதம் நிறைந்த முட்டை, மீன், டோஃபு மற்றும் பருப்பு வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். சில முழு தானியங்களையும் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி
வைட்டமின் டியை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும், நோயாளி விரைவில் குணமடைவார். ஏனெனில் கோவிட் நோயாளிகளுக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது என்பதை சமீபத்திய ஆய்வு உறுதிசெய்திருக்கிறது.
மசாலா பொருட்கள்
கோவிட் வைரஸால் வாயின் சுவை மறைந்தால், உணவில் பூண்டு, இஞ்சி, கிராம்பு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் அனைத்து வகையான மசாலாப் பொருட்களையும் பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, நம் சுவை உணர்வும் சீராகும்.