மரணத்தை முன் கூட்டியே கணிப்பது எப்படி?
மனிதனுக்கு பிறப்பு இறப்பு என்பது ஒரு பொதுவானது என்றாலுமே இறப்பை மட்டும் யாராலும் கணிக்க முடியாது. ஆனால், அறிவியலாளர்களின் தகவலின் படி சில அறிகுறிகளை வைத்து இறப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமாம்.
அதன் அடிப்படையில், ஒருவருக்கு உடல் நிலை சோர்வடைந்தால், புதிய ஆய்வுகளின்படி இவை அகால மரணத்தை குறிக்கும் அறிகுறியாம். மன அழுத்தம் காரணமாக ஏற்படும் மன மற்றும் உடல் சோர்வு ஒரு நபரின் ஆரம்பகால மரணத்தைக் குறிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை சோர்வு அளவை 1 முதல் 5 வரை என்ற அளவில் அளவிட்டனர். 30 நிமிட நடை, லேசான வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட பராமரிப்பு, கடினமான வேலைகளால் ஏற்படும் சோர்வுகளை வரிசைப்படுத்தினர்.
அவர்களின் வயது, பாலினம் உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட ஆய்வாளர்கள், அகால மரணத்துக்கான காரணங்களை பட்டியலிட்டனர். இதில், மனசோர்வு முதல் இடத்தையும், வயது அல்லது குணப்படுத்த முடியாத நோய் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.
மேலும், இந்த ஆய்வை மேற்கொண்ட தொற்று நோயியல் இணைப்பேராசிரியர், டபிள்யூ. க்ளின் பேசும்போது, உடல் உழைப்பு மனிதனின் சோர்வைக் குறைப்பதாக தெரிவித்தார்.
இதனால், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்., ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துபவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.