கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி கொடுத்த சிவகுமார்- முதல்வருக்கு விடுத்த வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள்.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு உதவ எங்கள் குடும்பத்தின் சார்பில் இந்த தொகையை வழங்கினோம்.
தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கருணாநிதியை 40 ஆண்டுகளாக சந்தித்து இருக்கிறேன்.
இப்போது அவரின் வாரிசை முதல்வராக முதன் முதலில் சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.