யுவன் சங்கர் ராஜா டைட்டில் வின்னருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! கதறி அழுத கிருஷாங்
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இன் டைட்டிலை கிருஷாங் வென்றிருந்தார்.
அவருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லை, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இறுதிச் சுற்றில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
யுவன் சங்கர் ராஜா கொடுத்த பரிசு
அவர் தான் வெற்றியாளரை அறிவித்தார். அது மட்டும் இல்லை, வெற்றியாளரான கிருஷாங்கிற்கு தன் இசையில் பாடுவதற்கான வாய்ப்பையும் கொடுத்து அசத்தியுள்ளார்.
இதனை கேட்ட கிருஷாங் மேடையில் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியில் அழுத காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்திருந்தது.
விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது டைட்டில் வின்னரான கிருஷாங்கும் இணைந்துள்ளார்.