சூப்பர் சிங்கர் பைனலில் எழுந்த சர்ச்சை! மக்களுக்கு பிடித்த போட்டியாளரை ஒதுக்கிய பிரபல ரிவி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் ஜுனியர்ஸ் 8 நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில், சமூகவலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் வந்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள், பிக்பாஸ் நிழக்ச்சி , குக் வித் கோமாளி என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த நிலையில், ரிவி ஷோக்களுக்கு ஒருபுறம் ஆதரவு இருந்து வந்தாலும், அதே அளவு சர்ச்சையையும் அவ்வபோது சந்தித்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு தங்கள் குரல் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, வாரம் வாரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
இதன் இறுதி போட்டியில் கிரிஷாங், ரிஹானா, அபீனா, ட்ரினிடா, நேஹா என்ற குழந்தைகள் தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டு வின்னர், ரன்னர்களை அறிவித்தார்.
இதில், சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 பட்டத்தை கிரிஷாங் கைப்பற்ற, இரண்டாவது இடத்தை ரிஹானா தட்டி சென்றார். முதல் பரிசு பெற்ற கிரிஷாங்க்கு 60,000,00 மதிப்புள்ள வீடும், இரண்டாவது இடம் பிடித்த ரிஹானாக்கு 5 லட்சம் பணம் வழங்கப்பட்டது.
இந்த சூழலில், நாங்கள் ஓட்டு அளித்த செய்த நேஹாவுக்கு பட்டம் வழங்காமல் கிரிஷாங்க்கு பிரபல ரிவி வழங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இவர்கள் இரண்டு பேர்களை விட நேஹா சிறப்பாக பாடினார். ஆனால் அவருக்கு எப்படி மூன்றாவது இடம் வழங்கப்பட்டது என்று ஒரு சிலர் நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.