Super Singer: மேடையில் உறவினர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி! கண்ணீரில் மூழ்கிய போட்டியாளர்கள்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்காட்டி இறுதி சுற்றுக்கு தயாராகி வரும் நிலையில், உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் இறுதிச் சுற்றுக்கு போட்டியாளர்களை தெரிவு செய்கின்றனர். இதில் தங்களது திறமைகளை போட்டியாளர்கள் காண்பித்து வருகின்றனர்.
சாராஸ்ருதி மற்றும் காயத்ரி இருவரும் தங்களது திறமையினை வெளிக்காட்டி அரங்கத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். மேலும் இருவரது உறவினர்கள் மேடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து கண்ணீரில் ஆழ்த்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
