2 மணி நேரம் அழுதேன்.. Title Winner-னு நினைச்சு மேடை ஏறிய நஷ்ரீன் ஆதங்கம்
“2 மணி நேரம் அழுதேன்.. ” என சூப்பர் சிங்கர் போட்டியாளர் நஷ்ரீன் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து வந்தனர்.
2 மணி நேரம் அழுத சிறுமி
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டனர். அந்த வகையில், இந்த வாரம் Grand Finale சுற்று நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த அதில், Grand Finale சுற்றில் காயத்ரி டைட்டில் வின்னராகவும், நஷ்ரீன் இரண்டாம் இடத்தையும் பிடித்துக் கொண்டார். ஆனால் நஷ்ரீன் தான் டைட்டில் வின்னர் என பலரும் செட்டில் பேசிக் கொண்ட நிலையில், இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் 2 மணி நேரம் தொடர்ந்து அழுதுள்ளார்.
இதனை பேட்டியொன்றில் பகிர்ந்த சிறுமி, கண்ணீருடன் “மீண்டும் என்னை அழுக வைக்கிறீங்க..” என கூறியவுடன் அங்கிருந்த தொகுப்பாளர்கள் சமாதானம் செய்துள்ளனர்.
குழந்தைகள் இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த நடிகர் கமல்ஹாசன்,“ குழந்தைகளின் குறைகளை அந்த மேடையில் கூற வேண்டும். ஓவராக தட்டிக் கொடுத்தால் கடைசி அவர்கள் உடைந்து விடுவார்கள்..” என பேசியிருந்தார்.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் நஷ்ரீனுக்கு ஆறுதல் கொடுக்கும் வார்த்தைகளை குறிப்பிட்டு, கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
