பிக்பாஸ் ஜோடிகளான அமீர், பாவனி காதலில் திடீர் திருப்பம்! உண்மையை போட்டு உடைத்த பாவனி
பிக்பாஸ் ஜோடிகளாக ஆரம்பித்து தற்போதும் காதலர்களாக வலம் வந்த ஜோடிகளில் ஒருவரான பாவனி, அமீர் காதல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காதலில் ஏற்பட்ட சர்ச்சை
பிரபல சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி, தனது முதல் கணவரின் மரணத்திற்கு பின் மீடியாவிலிருந்து முற்றாக விலகியிருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் வெளியுலகிற்கு வந்த பாவனி, அமீருடன் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் விரையில் திருமணம் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது பாவனி நிகழ்ச்சியொன்றில் கூறிய பதில் பலரை குழப்பமடைய வைத்துள்ளது.
பாவனியின் பதில்
அண்மையில் தொலைக்காட்சி நிலையில் கலந்து கொண்ட பாவ்னியிடம், 'கடந்த கால வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதை திரும்ப பெற விரும்புகிறீர்கள்' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எனது கணவர் திரும்ப வர வேண்டும் எனவும் அவர் இப்போது உயிருடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது இந்த பதிலால் அமீர் என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் அமீருடன் தற்போது மகிழ்ச்சியான சூழலில் இருக்கிறேன்.
இந்த பதில் குழப்பமடைய வைத்தாலும் பாவனி இன்னும் பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பவில்லை என்று தெளிவாகிறது. அமீர் நிலை என்ன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.