வெறும் 30 ரூபாவுக்கு வயிறார சாப்பாடு போடும் நடிகர் சூரி...மனசு தான் கடவுள்! ஓட்டலுக்கு ஓடும் ஏழை மக்கள்
நடிகர் சூரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அம்மன் உணவகத்தை தொடங்கி உள்ளார்.
இந்த உணவகத்தில் உணவு தரமானதாகவும், அதே நேரத்தில் விலை குறைகாவும் உள்ளதால் நடிகர் சூரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மதுரை ராஜாஜி பொது மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த ஓட்டலை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் இந்த ஓட்டலுக்கு டென்டர் எடுத்தவர்கள் எல்லாம் மிகவும் குறைவான பணத்தைத்தான் வாடகையாக கொடுத்தார்கள்.
அதுமட்டும் இல்லாமல், சாப்பாட்டின் விலையை மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது சாப்பாடு தரமானதாகவும் விலை குறைவாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
வெறும் 30ரூபாய்
இந்த ஓட்டலில் தக்காளி சாதம், லெமன் சாதம்,தயிர் சாதம், புளி சாதம், நெய் சாதத்தின் விலை வெறும் 30ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால் அங்கு வரும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்காக இந்த ஓட்டலை தொடங்கி உள்ள சூரிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.