கையில் சிம் இல்லாத போன்! மகனை நம்பி வந்த 80 வயது மூதாட்டிக்கு நிகழ்ந்த சோகம்
கர்நாடகாவில் தனது அம்மாவை சிம் இல்லாத போனை கையில் கொடுத்து கோவில் ஒன்றில் விட்டுவிட்டு தப்பிச் சென்ற மகனை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மகனுக்காக கோவிலில் தாய்
கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிகி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஹுலிகெம்மா கோவில். இந்த கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது அம்மாவை அழைத்துவந்த மகன் அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.
மேலும், தனது தாயிடம் சாதாரண ஒரு போனை கையில் கொடுத்துவிட்டு, தன்னுடைய போன் நம்பர் இது என ஒரு காகிதத்தாளையும் கொடுத்துவிட்டு போயுள்ளார்.
மகன் போன் செய்வார் என்ற நம்பிக்கையில் மூதாட்டியும் கோவிலில் அமர்ந்திருந்த நிலையில், பக்தர்கள் கண்டு அவருக்கு சாப்பாடு மற்றும் போர்வை இவற்றினைக் கொடுத்து விசாரித்துள்ளனர்.
சிம் இல்லாத செல்போன்
விசாரித்த போது முதியவர் நடந்ததைக் கூறியுள்ளார். குறித்த போனை பக்தர்கள் வாங்கி பார்த்த போது அதில் சிம் இல்லாததும், அவர் கையில் வைத்திருந்த பேப்பரில் போன் நம்பர் எதுவும் எழுதாமல் வெறும் பேப்பராக இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தற்போது மூதாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், அவரிடம் விசாரிக்கவும் செய்துள்ளார். குறத்த மூதாட்டி தனது பெயர் காசிம் என்றும் உஜ்ஜயனி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூறியுள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட பொலிசார் குறித்த மூதாட்டியின் மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.