என்றும் அணையாத தீ இது.. வேடனை ஓரங்கட்டிய இலங்கை கலைஞரின் படைப்பு
இலங்கையில் நடந்த அவலங்களை " எழுதீ " என்ற தலைப்புடன் பாடல் எழுதி, பாடிய இளைஞரின் திறமை இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தமிழனின் படைப்பு
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தமிழ் சொல்லிசை (Hip hop music) சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருப்பவர் தான் சொல்லிசைப் பொடியன் சிவி லக்ஸ்.
இவர், பாடிய பாடல்கள் அனைத்தும் இலங்கையில் நடக்கும் அவலங்களை கருப்பொருளாக கொண்டமைந்துள்ளன.
அந்த வகையில் கடைசியாக இவர் படைப்பில் வெளியான பாடல் தான் " எழுதீ ".
இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “அகோர யுத்தத்தின் பிடியில் அநீதியாக இறந்த எமது மக்களுக்காக அந்த பாடலை இசையமைத்து பாடி மே மாதம் வெளியீடும் செய்தேன். ஒன்பது பேர் சேர்ந்து ஒருவனை அடித்ததை, சொல்கிறார் வீர வரலாறு, நெஞ்சில் குண்டோடு துளைத்து விழுந்த கதை, சொல்லும் எங்கள் வீர புராண நூறு என்ற வரிகளுடன் படைக்கப்பட்ட இந்த பாடலில் இறுதி யுத்தத்தில் தமிழினத்திற்கு நடந்த ஒட்டுமொத்த அநீதியையும் சொல்லி விடுகிறது . மேலும், இந்த பாடல் தமிழ் உணர்வையும், விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தையும், தமிழ் இனத்தின் வீரத்தையும் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த சமூக நீதிப் பாடலாகும்...” என கூறினார்.
இது போன்று பல விடயங்களை பகிர்ந்து கொண்ட கலைஞர், இந்த படைப்பின் மூலம் உலகம் அறியும் தமிழனாக மாறலாம் என்ற கனவுடன் போராடி வருகிறார்.
இந்த பாடலை பார்த்த இணையவாசிகள், இந்தியாவில் வேடன் போன்று உங்களாலும் சாதிக்க முடியும் என தங்களின் ஆதரவை பகிர்ந்து வருகிறார்கள்.
பாடல் காணொளி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |