8 வருடமாக சினேகன் காதலை மறைத்தது ஏன்? காதல் கணவர் சினேகனை பற்றி உருக்கமாக பேசிய மனைவி!
பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகன் சமீபத்தில் தான் நீண்ட நாள் காதலியான கன்னிகா ரவியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்தையே கமல்ஹாசன் முன்னிலையில் தான் தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வைத்தார்.
இவர்களை காதலை வெளிப்படுத்திக்கொள்ள இருவரும் தங்கள் கையில் மாறி மாறி பெயரை டாட்டூ குத்திகொண்டனர். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், சினேகன் மற்றும் கன்னிகா ரவி இணைந்து நமது சினி உலகம் சேனலில் அவர்களின் காதல் அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளனர்.
அப்போது, பேசிய அவர்கள் கன்னிகா காதல் அனுபவத்தை பற்றி முதலில் சினேகனை நான் படம் நடித்துகொண்டிருக்கும் போது தான், கவிஞர் சினேகனுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்போது யார் அவங்க என கேட்டதற்கு அவங்க பெரிய பாடலாசிரியர் என சொன்னாங்க,.. அப்போதான் அவங்களை முதல் முறை பார்க்க சென்றேன். அப்போது தான் ஒரு பயத்துடன் இருந்தேன்.
பார்த்தவுடனே தான் தெரிந்தது நமக்கானவங்க இவங்க என நினைத்தேன். அதன் பின்னர் எனக்கு ஒரு மெசேஜ் செய்தார் அதில் நல்ல சந்திப்பு கனி என மெசேஜ் அனுப்பிருந்தார். அதற்கு அப்பறம் பிடிச்சிருக்கு என காதலை கூறினார்.
அதற்கு, பதலளித்த சினேகன் அவரது கவிதை ஸ்டைலிலேயே, பொதுவாக ஒருவரை பார்க்கும்போது தான் மனசு பேச ஆரம்பிக்கும், அதவரை நாவலையும், செய்கையாலும் தான் பேசுறேன்.
மனசு பேச ஆரம்பிக்கும் போது தான் இதுபோன்ற உணர்வு ஏற்பட்டது அவங்களை முதல் முறை பார்க்கும் போது. பின்னர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டோம் என தெரிவித்தார்.
அதன் பின்னர் என் வாழ்நாளில் மிகப்பெரிய சர்ப்ஃரைஸ் இவங்க ஒன்று கொடுத்தாங்க, அது தான் எனக்காக காத்திருக்க ஆரம்பிச்சாங்க, வீட்டில வந்து சமைச்சுலாம் கொடுத்து, ஒரு நாள் வீட்டுக்கு வந்து, சேலையில் வந்து வீடு முழுக்க அகல் விளக்குகளை ஏற்றி, உள்ளங்கையில் தாலி வைத்து என்னிடம் காதலை வெளிப்படுத்தினார் என மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், பல விஷயமான அவர்களின் காதல் அனுபவங்களை கீழ்கண்ட காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்..