உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சினேகா கூறிய நன்றி: மகனுடன் வெளியிட்ட காணொளி
நடிகை சினேகா தனது மகனுடன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்கள்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.
அவ்வப்போது கலக்கலான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திவரும், நடிகை சினேகாவின் இன்ஸ்டாகிராமிற்கு 1 மில்லியன் ஃபாலோவர்கள் வந்துள்ளதால், அதற்கு நன்றி தெரிவித்து மகனுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.