பாம்பு கடித்து இறந்த அண்ணன்... இறுதி சடங்கில் தம்பியும் கடித்து பலி - விடாமல் பலி வாங்கும் பாம்பு;
பாம்பு கடித்து பலியான அண்ணனின் இறுதிச்சடங்கின் போது தம்பியும் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் பவானிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா(38). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு ஒன்று கடித்துள்ளது.
பாம்பு கடித்து பலி
அதன் பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிஸ்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு இறுதிச்சடங்கு நடைப்பெற்றது.
பின் உயிரிழந்த மிஸ்ராவின் இளைய சகோதரரான கோவிந்த் மிஸ்ரா(22) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அடுத்து தம்பியும் பலி
அப்போது அவரது அறைக்குள் நுழைந்த பாம்பு அவரை கடித்துள்ளது. மேலும் அவரது அருகில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகர் பாண்டே என்பவரையும் அந்த பாம்பு கடித்துள்ளது.
இருவரும் அலறி துடிக்கவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், கோவிந்த மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரசேகர் பாண்டே கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதனால் ஒரே பகுதியில் பாம்பு கடியால் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையுமே ஏற்படுத்தி இருக்கிறது.