Siragadikka Aasai: ரோகினியை விவாகரத்து செய்ய விஜயாவின் திட்டம்... கனவு பலிக்குமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் மற்றும் ரோகினி இருவருக்கும் விவாகரத்து செய்வதற்கு விஜயா திட்டமிட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து திருட்டு செயினை வாங்கி வைத்துள்ளார்.
இந்த பிரச்சனை எப்பொழுது பூதாகரமாக வெடிக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜயா மனோஜ் மற்றும் ரோகினியை பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதாவது ரவியின் முதலாளி பெண்ணான நீத்துவை மனோஜிற்கு திருமணம் செய்ய வைப்பதற்கும், அவருடைய சொத்தின் மூலம் பணக்கார மாப்பிள்ளையாகிவிடுவான் தனது மகன் என்று திட்டமிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |