Siragadikka Aasai: சத்தியம் செய்ய தயங்கும் ரோகினி... தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கா? அண்ணாமலை கேள்வி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் பிரச்சனைக்கு தீர்க்க வந்த பாட்டி அவரிடம் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்குகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியா மாமா குறித்த உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மையால் கொதித்தெழுந்த விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்தியுள்ளார். தற்போது இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதற்கு அண்ணாமலை ஊரிலிருந்த தனது அம்மாவை வரவழைத்துள்ளார்.
பாட்டி மீனாவை கற்பூரம் ஏற்றி கொண்டு வரக்கோரி, அதில் ரோகினியிடம் சத்தியம் செய்யக் கூறுகின்றார். அண்ணாமலை இன்னும் நாங்கள் தெரிஞ்சிக்க வேண்டிய விடயம் இருக்கா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு எந்தவொரு பதிலளிக்காத ரோகினி திகைத்து நிற்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |