Siragadikka Aasai: ரோகினியின் புதிய திட்டம்... மனோஜை விஜயாவிடமிருந்து பிரித்துவிடுவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியை மனோஜிடமிருந்து பிரிக்க விஜயா திட்டமிட்ட நிலையில், ரோகினி அந்த வேலையை செய்ய முடிவு செய்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.
இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா விடயத்தில் விஜயா சிந்தாமணியுடன் சேர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றார்.
ஆனால் எந்தவொரு சவாலையும் மீனா முத்துவை வைத்து எளிதாக கடந்து வந்துவிடுகின்றார். தற்போது விஜயாவின் வன்மம் மீண்டும் ரோகினி மீது வந்துள்ளது.
மனோஜ் ரோகினியை பிரிக்க விஜயா திட்டமிட்டுள்ள நிலையில், இதனை அறிந்த ரோகினி சுதாரித்துக் கொண்டுள்ளார். மனோஜை விஜயாவிடமிருந்து பிரிப்பதாக திட்டமிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |