Siragadikka Aasai: ஸ்ருதியிடம் சண்டையிட்ட ரோகினி! மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண ஏற்பாடு
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவிற்கு ஸ்ருதி நகை எடுத்து தருவதாக கூறிய நிலையில், இதற்கு ரோகினி அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை கொடுமை படுத்தி வருகின்றார்.
சீதா அருண் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு முத்து பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் மீனா யாருக்கும் தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது முத்து காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், திருமண ஏற்பாடு நடைபெறுகின்றது. சீதாவிற்கு ஸ்ருதி நகை எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு ரோகினி ஸ்ருதியிடம் சண்டையிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |