Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல்
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் வாழ்க்கைக்கு இடையூறாக நிற்கும் நீத்துவை முத்து தனது நண்பனுடன் சென்று மிரட்டியு்ளள நிலையில், தற்போது ரவி முத்து இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள விவாகரத்து செய்வதற்கு விஜயா ஏற்பாடு செய்துள்ளார்.
இவர்களின் பிரச்சனை இன்னும் அடங்குவதற்குள் ரவி மற்றும் ஸ்ருதி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. நீத்து ரவியைக் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் ஸ்ருதி கோபத்தில் இருந்துவரும் நிலையில், அவரை மீனா சமாதானப்படுத்தி வருகின்றார். தற்போது ஸ்ருதிக்கு ஆதரவாக முத்து தனது நண்பனுடன் நீத்து ஹோட்டலுக்கு சென்று பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
முத்துவின் மிரட்டலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு யாரோ நீத்துவின் ஹோட்டலை தீ வைத்து கொளுத்தியதுடன், நீத்துவின் காலையும் அடித்து உடைத்துள்ளனர்.
இதன் உண்மைத்தன்மை அறியாத ரவி நேராக விட்டிற்கு வந்துள்ள ரவி, முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்துள்ளார். முத்துவிற்கு எதிரிகள் அதிகமாக இருந்துவரும் நிலையில், யார் இடையில் புகுந்து இவ்வாறு காய் நகர்த்துகின்றார் என்பது கேள்விக் குறியாக உள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |