Siragadikka Aasai: ஷோ ரூமை சீல் வைக்க வந்த அதிகாரிகள்... திகைத்து நிற்கும் ரோகினி மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகினி கடைக்கு சீல் வைப்பதற்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மீனா தற்போது தனது தொழிலில் நன்றாக வளர்ந்து வரும் நிலையில், முத்துவும் அதற்காக நன்றாக உதவி செய்து வருகின்றார்.
இந்நிலையில் ரோகினி, மனோஜ் ஜிஎஸ்டி வரி கட்டாததால் ஷோ ரூமை சீல் வைப்பதற்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.
ஒருவழியாக ரோகினி பணத்தை ஏற்பாடு செய்து கட்டியுள்ளார். இதனால் மனோஜ் ரோகினியை கொண்டாடி வருகின்றார்.
மற்றொரு புறம் ரோகினியின் தோழி காதலில் விழுந்த நிலையில், இதற்கான சில ஐடியாவை மீனாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு தனது காதலை வளர்த்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |