Siragadikka Aasai: ரகசிய திருமணத்தை அறியாத முத்து! சீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததால் அதிர்ச்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து சீதாவின் ரகசிய திருமணத்தை அறியாமல், மீனா வீட்டின் உரிமையாளரிடம் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
மீனா வீட்டில் முத்து அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்த நிலையில், வீட்டின் உரிமையாளர் சீதாவின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இதற்கு முத்து அவர்களது வாயை அடைத்ததுடன், சீதாவிற்கு தான் நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து வைப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் முத்துவிற்கு தெரியாமல் மீனா சீதாவிற்கு ரகசிய திருமணம் செய்து வைக்க உள்ளார். இந்த உண்மை அறிந்த பின்பு முத்து எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |