Siragadikka Aasai: முத்துவை நேருக்கு நேர் சந்திப்பாரா மலேசியா மாமா... எதிர்பாராத டுவிஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து எதிர்பாராத விதமாக ரோகினியின் மலேசியா மாமா சந்திப்பது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மீனாவிற்கு வந்த மிகப்பெரிய ஆர்டரை செய்யவிடாமல் தடுப்பதற்கு விஜயா தடுப்பதற்கு திட்டமிட்ட நிலையில், மீனா அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
இந்நிலையில் வரும் வார ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலையின் நண்பர் பரசுவின் மகள் கடிதம் எழுதிவைத்து விட்டு காதலனுடன் சென்றுள்ளதாக காட்டப்படுகின்றது.
குறித்த காதலன் வீட்டிற்கு மலேசியா மாமா நண்பராக இருக்கும் நிலையில், முத்து மீனா பரசுவின் மகளை மீட்டு வந்துள்ளனர்.
பரசுவின் வீட்டில் முத்து இருப்பது தெரியாமல், மலேசியா மாமா பெண் கேட்டு வருகின்றார். இதற்கு பின்பு கதையில் ரோகினி சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |