Siragadikka Aasai: முத்துவிடம் கதறி அழும் பெண்... சீதாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய நிலையில், அவர்களின் கதை சீதாவின் கதையைப் போன்று உள்ளதால், அவரது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினி தற்போது விஜயாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட நிலையில், பல கொடுமையை சந்தித்து வருகின்றார்.
மீனாவும் தனது தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்கு முத்துவின் அனுமதியைக் கேட்டு வருகின்றார். இந்நிலையில் காதல் தோல்வியால் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்துள்ள நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனால் குறித்த பெண்ணின் தாய் முத்துவிற்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |