Siragadikka Aasai: மீனாவிடம் கண்கலங்கிய முத்து! சீதா வீட்டில் நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் வீட்டில் மாமியார் மருமகளின் பாசம், மேலும் மீனாவிற்கு அம்மாவிற்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து கண்கலங்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவரிடமிருந்து தப்பிக்க ஸ்ருதி அம்மாவிடம் பணம் வாங்கியுள்ளார்.
இந்த விடயம் மீண்டும் மனோஜ் வீட்டிற்கு தெரிந்த நிலையில் ரோகினியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
மீனா முத்து இருவரும் பிரிந்திருந்த நிலையில் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். மேலும் சீதா வீட்டில் வைத்த விருந்துக்கு சென்ற மீனா அங்கு தனது தம்பிக்கும், அம்மாவிற்கும் கிடைத்த மரியாதையும், சீதாவை அவரது மாமியார் பார்த்துக்கொள்ளும் பாசத்தையும் பார்த்து பிரமிப்பில் உள்ளார்.
இதனை முத்துவிடம் வந்து கூறியுள்ளார். முத்து இந்த ஜென்மத்தில் அந்த பாசம் நமக்கு கிடைக்காது என்று கூறி கண்கலங்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |