Siragadikka Aasai: மீண்டும் சந்தேகத்தின் வலையில் ரோகினி... கோபத்தில் மனோஜ் கேட்ட கேள்வி
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை தனது வழிக்கு கொண்டு வருவதற்காக ரோகினி மற்றொருவரை காதலிப்பது போன்று நடித்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினி தற்போது விஜயாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட நிலையில், பல கொடுமையை சந்தித்து வருகின்றார்.
மீனாவின் தங்கை சீதாவின் காதலுக்கு முத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். மற்றொரு புறத்தில் அம்மாவின் பேச்சைக் கேட்டு தன்னை ஒதுக்கி வைத்திருக்கும் மனோஜை தனது வழிக்கு கொண்டு வருவதற்கு ரோகினி வேறொரு ஆணுடன் பேசுவது போன்று நடித்து வருகின்றார்.
ரோகினியின் நடிப்பினை அறியாத மனோஜ் அவரை கண்காணிப்பதுடன், மொபைலில் பேசுவது யார் என்று சந்தேகத்தில் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
ஆனால் வழக்கம் போன்று ரோகினி தனது பாணியில் பொய் கூறி நடித்து வருகின்றார். ரோகினியின் அடுத்த உண்மை எப்பொழுது அம்பலமாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |