Siragadikka Aasai: கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி... பணத்தை சாமர்த்தியமாக மீட்ட மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பிளானால் சிந்தாமணி கையும் களவுமாக சிக்கியுள்ளதுடன், மீனாவின் பணமும் திரும்ப கிடைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனா தனியாக தொழில் ஒன்றினை தொடங்கியுள்ள நிலையில், இவருக்கு தொழில் போட்டியாக சிந்தாமணி என்ற வில்லி களமிறங்கியுள்ளார்.
மீனா எடுத்த 2 லட்சம் ரூபாய் ஆர்டரை மோசடி செய்து அந்த பணத்தை ஏமாற்றி அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். மீனா சிந்தாமணியின் வழியிலேயே சென்று அவரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.
மீனாவின் இந்த செயலை முத்து பாராட்டிய நிலையில், விஜயாவிற்கு பயங்கரமான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
