Siragadikka Aasai: மீனா செய்து வைத்த திருட்டு கல்யாணம்... உண்மையறிந்த முத்து எடுத்த அதிரடி முடிவு
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவிற்கு மீனா பதிவு திருமணம் செய்து வைத்தது தற்போது முத்துவிற்கு தெரியவந்துள்ள நிலையில், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை கொடுமை படுத்தி வருகின்றார்.
சீதா அருண் காதலித்து வந்த நிலையில், முத்துவிற்கு தெரியாமல் மீனா பதிவு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது இவர்களின் காதலுக்கு முத்து சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது முத்துவிற்கு சீதாவின் முதல் திருமணம் குறித்து தெரியவந்துள்ளது. இதனால் முத்து பயங்கர கோபத்தில் மீனாவிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டை இவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிவதற்கு காரணமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |