Siragadikka Aasai: சூழ்ச்சியினால் ஏமாந்து நிற்கும் மீனா... மீளப்போவது எப்படி?
சிறகடிக்க ஆசை சீரியலில் சூழ்ச்சியினால் மீனா ஏமாந்து நிற்கும் நிலையில், அடுத்ததாக விஜயாவிற்கு மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனா தனியாக தொழில் ஒன்றினை தொடங்கியுள்ள நிலையில், இவருக்கு தொழில் போட்டியாக சிந்தாமணி என்ற வில்லி களமிறங்கியுள்ளார்.
இவர் விஜயாவுடன் சேர்ந்து கொண்டு, மீனாவிற்கு எதிராக திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இருவரும் சேர்ந்து 2 லட்சம் ரூபாய் மீனாவிற்கு நஷ்டம் வருவதற்கு கூறியுள்ளனர்.
தற்போது மீனா பணத்திற்கு ஒருபுறம் பரிதவித்து வரும் நிலையில், விஜயா தான் காரணம் என்பதை நிரூபிக்க சில வழிகளையும் தேடி வருகின்றனர். மீனாவிற்கு ஸ்ருதி உதவியாக இருப்பார் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |