Siragadikka Aasai: கொழுத்தி போட்டுச் சென்ற ரோகினி... கதறியழுது மன்னிப்பு கேட்கும் மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தான் செல்வதற்கு முன்பு மீனாவையும் போட்டுக் கொடுத்து சென்ற நிலையில், அவரது வாழ்க்கைக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல ஆண்டுகளாக ரோகினி மறைத்து வைத்திருந்த உண்மை தற்போது முத்துவால் அம்பலமாகியுள்ளது.
ஒட்டுமொத்த குடும்பமே பேரதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், மனோஜ் ரோகியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். ரோகினியும் அனைவரிடமும் தனது நியாயத்தைக் கூறி கெஞ்சியுள்ளார்.. ஆனால் யாரும் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் வெளியே அனுப்பப்பட்ட ரோகினி, கடைசியாக செல்லும் முன்பு மீனாவிற்கு உண்மை தெரியும் என்பதை அனைவரது முன்னிலையில் உடைத்துள்ளார்.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் மீனா மீது கோபமாக இருந்த நிலையில், விஜயா அவரை வீட்டைவிட்டு துரத்துமாறு நெருக்கடி கொடுக்கின்றார். ஆனால் மீனா தன்னை மன்னிக்குமாறு அனைவரிடமும் கெஞ்சியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |