Siragadikka Aasai: கையை நீட்டி ரோகினியை காட்டிக் கொடுத்த க்ரிஷ்... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கண்ஜாடை காட்டியதால் க்ரிஷ் மனேஜை டாடி என்று அழைத்துள்ள நிலையில், கடைசியில் ரோகினி கொத்தாக மாட்டிக் கொண்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

இந்நிலையில் க்ரிஷை தத்தெடுக்க நினைத்த நிலையில், மீனா உண்மையை கூற முடியாமல் இதற்கு மறுப்பு தெரிவித்தார். சீதாவும் தனது கணவரிடம் இந்த விடயத்தினை கூறியதையடுத்து, அவர் முத்துவை பொது இடத்தில் வைத்து அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் கோபம் தாங்க முடியாத முத்து அருணை அடித்துள்ளார். இதனை அவதானித்த அண்ணாமலை விஷயம் அறியாமல் முத்துவை அடித்துள்ளார்.
தற்போது ரோகினி க்ரிஷ் மீது மனோஜிற்கு பாசம் வரவேண்டும் என்பதற்காக அவரை டாடி என்று அழைக்க வைத்துள்ளார். க்ரிஷும் ரோகினி கூறியது போன்று வந்து மனோஜை கூப்பிட்டுள்ளார்.
பின்பு அண்ணாமலை யார் இவ்வாறு கூப்பிடச் சொன்னது? என்று க்ரிஷிடம் கேட்கவே, க்ரிஷ் ரோகினியை கையை நீட்டி காட்டிக் கொடுத்துள்ளான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |