Siragadikka Aasai: விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்.... மீண்டும் சிக்கிய ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியை மன்னித்த விஜயா பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றபோது அங்கு அவமானப்பட்டு்ள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்துள்ளார். விஜயாவின் மனதை மாற்றுவதற்காக ரோகினி சமீபத்தில் சிட்டியிடமிருந்து ஒரு செயின் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார்.
தற்போது ரோகினியின் சதியால் பயந்து நடுங்கிய விஜயா அவரை மன்னித்து மனோஜுடன் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் மற்றொரு புறம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற இடத்தில் ரோகினி வாங்கி கொடுத்தது திருட்டு நகை என்பது அம்பலமாகியுள்ளது.
இதனால் விஜயா அனைவர் முன்பும் அவமானப்பட்டு நின்றுள்ளார். ரோகினியின் முதல் திருமணம் எப்போது விஜயாவிற்கு தெரியவரும் என்ற கேள்வியும் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |