மனம் விரும்புதே Round இல் காதலை சொன்ன ராவணன்... உண்மையாகவே காதலிக்கின்றார்களா?
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற மனம் விரும்புதே Round இல் போட்டியாளர்கள் தங்கள் துணையை சர்ப்ரைஸ் செய்வதற்காக நிஜ காதலர்களாகவே மாறிய காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற மனம் விரும்புதே Round இல் ஆண் போட்டியாளர்கள் துணை போட்டியாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் வகையில் காதல் சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்சியில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய போட்டியாளர்களாக பங்கேற்றுவரும் ராவணன் மற்றும் சீரியல் நடிகை ஆஷா ஆகியோருக்கு இடையில் உண்மையிலேயே காதல் இருப்பதாக ரசிகர்களுக்கு மாத்திரமற்றி, நடுவர்களுக்கும் சந்தேகம் இருப்பது அனைவரும் அறிந்தது தான்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இவர்களின் இந்த வார பர்ப்போமன்ஸ் அல்டிமேட்டாக இருந்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |