12 நாட்களுக்கு பின் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பாடகி சங்கீதாவின் உடல் கண்டெடுப்பு - சிக்கிய குற்றவாளிகள்
காணாமல் போன பாடகி சங்கீதாவின் உடலை 12 நாட்களுக்கு பின் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாக திரையுலகை சேர்ந்த இளம் நடிகைகள் உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், டெல்லியை சேர்ந்த பாடகி சங்கீதா கோர மரணம் தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி ஹரியானாவில் வசித்த இவர், ஹரியான்வி மொழி பாடகியாக அறியப்பட்டார். கடந்த மே 11ம் தேதியில் சங்கீதாவை காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
உடல் மீட்பு
இதன்பின்னர், 12 நாட்கள் கடந்த நிலையில் தற்போது ஹரியானாவில் உள்ள பைனி பைரன் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலிசார் அது சங்கீதா தான் என மருத்துவரை கொண்டு உறுதி செய்தனர். இதன் பின்னர், கொலை மற்றும் ஆள் கடத்தல் வழக்கில் வழக்கைப்பதிவு செய்து, ஹரியானாவை சேர்ந்த ரவி மற்றும் ரோகித் என்ற இருவரை கைது செய்தனர்.
4 ஆண்டுகளாக பிச்சை எடுத்த நபர்! மனைவிக்கு 90 ஆயிரத்தில் பரிசு
இருவர் கைது
மேலும், மியூசிக் வீடியோ எடுப்பதாகக் கூறி, சங்கீதாவை வரவழைத்து அவரை திட்டமிட்டு கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.
தொடர்ந்து சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள் ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.