Singappenne: அன்புவின் காலில் விழுந்த மகேஷ்... சடலமாக இழுத்துவரப்படும் ரகு
சிங்கப்பெண்ணே சீரியலில் கருணாகரன் ரகுவை கொலை செய்துள்ள நிலையில், மகேஷ் அன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தேடி வருகின்றார்.
ஆனந்திக்கு அன்பு உதவியாக இருக்கும் நிலையில், காட்டில் சிக்கிய இவர்களது கண்ணில் ரகு சிக்கினார். ஆனாலும் அன்புவிடமிருந்து ரகு எஸ்கேப் ஆகி கருணாகரனிடம் சிக்கியுள்ளார்.

இதற்கிடையே அன்புவிடம் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு நீ காரணம் இல்லையா என்று சத்தியம் வாங்கியுள்ளார் மகேஷ். இதனால் ஆனந்தி பயங்கர கோபத்தில் மகேஷை பேசினார்.
ரகு கருணாகரன், மித்ரா குறித்த உண்மையை போலிசாரிடம் கூறிவிடுவேன் என்று கூறிய நிலையில், கருணாகரன் அவரை கொலை செய்துள்ளார்.
உயிரற்று கிடந்த ரகுவை மூட்டையில் கட்டி இழுத்துக் கொண்டு செல்கின்றார். இந்த பழி அன்பு மீது விழுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |