Singappenne: அலறி கத்திய ஆனந்தி.. அன்புவிடம் வசமாக சிக்கும் துளசி
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அலறி கத்தும் சத்தம் கேட்டு அன்பு ஓடி வருகிறார். இந்த நிலையில் துளசி அன்பிடம் வசமாக மாட்டப்போகின்றார் என தெரிகிறது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுயதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாடு செய்த காரணத்தினால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர். தேனிலவு சென்ற இடத்தில் ஆனந்தியைக் கொலை செய்வதற்கு துளசி பல முயற்சிகள் செய்தும் அன்பு அவரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஆனந்தி தன்னுடைய தண்ணீர் போத்தலை வைத்த இடம் தேடி தனியே செல்கிறார்.
இந்த சமயத்தில் அவரை மலையில் இருந்து தள்ளி விட துளசி முயற்ச்சி செய்கிறார்.
ஆனால் அன்புவிற்கு ஆனந்தி ஏதோ ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்று என கத்துவது போல சத்தம் கேட்கிறது.
இதை கேட்டு அன்பு ஓடி அந்த இடத்தை நெருங்கியதும் ப்ரமொ காட்சி முடிவடைகின்றது. இதனை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் இதை பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |